எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது! முதல்வர் விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்!தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும்: நியூசி. பந்துவீச்சுப் பயிற்சியாளர்

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக அவர் எப்படி விளையாடினார் எனப் பார்த்தோம்...

News image
Updated On :25 மே 2021, 12:38 pm IST

இந்தியாவை நியூசிலாந்து அணி வீழ்த்த வேண்டும் என்றால் ரிஷப் பந்த்தின் அதிரடி ஆட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என நியூசிலாந்து பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஷேன் ஜுர்கென்சன் கூறியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக ஜூன் 2 அன்று இந்திய அணி இங்கிலாந்துக்குச் செல்கிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் உள்ள செளதாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடைபெறுகிறது. 

சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்தியாவின் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடினார். இரு தொடர்களையும் இந்திய அணி வெல்ல அவருடைய பங்களிப்பு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது. இதனால் சொந்த மண்ணிலும் வெளிநாட்டிலும் இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் தான் முதல் தேர்வாக உள்ளார். 

இந்நிலையில் ரிஷப் பந்தின் பேட்டிங் பற்றி நியூசிலாந்து பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஷேன் ஜுர்கென்சன் கூறியதாவது:

தனது மனவலிமை மூலம் ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடிய ஆபத்தான வீரர், ரிஷப் பந்த். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக அவர் எப்படி விளையாடினார் எனப் பார்த்தோம். நேர்மறை சிந்தனைகள் கொண்டவர். அதேசமயம் அது விக்கெட் எடுக்கும் வாய்ப்பையும் எங்களுக்குத் தரும். எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி ரிஷப் பந்த் ரன்கள் எடுப்பதைத் தடுக்க வேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் இயல்பாக ஆடக்கூடியவர். அவரைத் தடுத்து நிறுத்துவது கடினம் என்பதை நாங்கள் நினைவில் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.