இந்திய அணியின் புதிய சீருடையை பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளது.
டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 24 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியின் புதிய சீருடையை கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா, ராகுல், பும்ரா ஆகியோர் அணிந்து அறிமுகம் செய்யும் புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. டி20 உலகக் கோப்பையில் இந்தச் சீருடையை இந்திய அணியின் பயன்படுத்திக்கொள்வார்கள். இதையடுத்து புதிய சீருடை பற்றிய தங்கள் கருத்துகளை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.
ஓய்வில்லை: இலங்கை அணியில் மீண்டும் விளையாட மேத்யூஸ் ஒப்புதல்
ஆம்ப்ரோஸ் மீது எவ்வித மரியாதையும் இல்லை: கிறிஸ் கெயில் சாடல்
டி20 உலகக் கோப்பை அணியில் நரைனுக்கு வாய்ப்பளிக்கப்படுமா?: மே.இ. தீவுகள் கேப்டன் பொலார்ட் பதில்
கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதற்கு விளக்கம் அளிக்கவில்லை: டேவிட் வார்னர் வேதனை
பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ள எம்.எஸ். தோனி கிரிக்கெட் அகாதெமி
பாண்டியாவுக்குச் சிக்கல்: வலைப்பயிற்சி வீரராக வெங்கடேஷ் ஐயர் தேர்வு
இறுதி ஆட்டத்தில் நுழைவது யாா்?: கொல்கத்தா - டெல்லி இன்று மோதல்
டி20 உலகக் கோப்பை: நெட் பௌலராகிறாா் அவேஷ் கான்