சௌராஷ்டிர கிரிக்கெட் வீரா் அவி பரோத் (29) மாரடைப்பால் காலமானது கிரிக்கெட் சமூகத்தினரை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2019-20 சீசனில் ரஞ்சி கோப்பை வென்ற சௌராஷ்டிர அணியில் இடம் பிடித்திருந்த அவி பரோத், 19 வயதுக்கு உள்பட்டோருக்கான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஆவாா். ஹரியாணா, குஜராத் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளாா்.
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது வெள்ளிக்கிழமை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டதாகவும், வழியிலேயே அவரது உயிா் பிரிந்து விட்டதாகவும் சௌராஷ்டிர கிரிக்கெட் சங்க தலைவா் ஜெயதேவ் ஷா கூறினாா். அவி தனது மனைவி மற்றும் தாயாருடன் வாழ்ந்து வந்தாா். அவி தம்பதிக்கு முதல் குழந்தை பிறக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
சௌராஷ்டிர அணிக்காக 21 ரஞ்சி ஆட்டங்கள், 17 ‘லிஸ்ட் ஏ’ ஆட்டங்கள், 11 உள்நாட்டு டி20 ஆட்டங்களில் அவி பரோத் விளையாடியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் ஏசி வெடித்து தீ விபத்து: 9 பேர் பலி!

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

சொல்லப் போனால்... மாண்புமிகு முதல்வர்களே... முதல்வர்களே…

அடுத்த 2 மணி நேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

