ராகுல் டிராவிடின் ஒப்பந்தம் முடிந்தது: புதிய விண்ணப்பம் கோரிய பிசிசிஐ

ஒப்பந்தம் முடிவடைந்ததையடுத்து என்.சி.ஏ. தலைவர் பதவிக்கான புதிய விண்ணப்பங்களைக் கோரியுள்ளது...
ராகுல் டிராவிடின் ஒப்பந்தம் முடிந்தது: புதிய விண்ணப்பம் கோரிய பிசிசிஐ

நேஷனல் கிரிக்கெட் அகாதமியின் தலைமைப் பொறுப்பில் உள்ள ராகுல் டிராவிடின் ஒப்பந்தம் முடிவடைந்ததையடுத்து புதிய விண்ணப்பங்களைக் கோரியுள்ளது பிசிசிஐ.

முன்னாள் வீரரான ராகுல் டிராவிட், இந்திய ஜூனியர், இந்திய ஏ அணிகளின் பயிற்சியாளராக இருந்தார். 2019-ல் பெங்களூரில் உள்ள பிசிசிஐயின் நேஷனல் கிரிக்கெட் அகாதமியின் (என்.சி.ஏ.) தலைவராக நியமிக்கப்பட்டார். 

பிசிசிஐ விதிமுறைகளின்படி என்.சி.ஏ. தலைவராக ராகுல் டிராவிட் 2 வருடங்கள் மட்டுமே பணியாற்ற முடியும். அவருடைய ஒப்பந்தம் முடிவடைந்ததையடுத்து என்.சி.ஏ. தலைவர் பதவிக்கான புதிய விண்ணப்பங்களைக் கோரியுள்ளது பிசிசிஐ. விண்ணப்பிக்கக் கடைசித் தேதி ஆகஸ்ட் 15. இதையடுத்து என்.சி.ஏ. தலைவராக மீண்டும் பணியாற்ற பிசிசிஐக்கு ராகுல் டிராவிட் விண்ணப்பம் அனுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

என்.சி.ஏ. தலைவர் பதவிக்கு ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பிக்க முடியும். ஆனால் ரவி சாஸ்திரியின் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி, டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. 60 வயது வரை மட்டுமே இந்திய அணியின் பயிற்சியாளராகப் பணியாற்ற முடியும். ரவி சாஸ்திரிக்குக் கடந்த மே மாதம் 59 வயது முடிந்தது. எனவே இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதன் அடிப்படையில் பிசிசிஐ அமைப்பில் ஏதாவதொரு பெரிய பொறுப்பில் டிராவிட் நிச்சயம் இருப்பார் என பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் இலங்கை சென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com