எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவின் மொயீன் அலி, சாம் கரண் பங்கேற்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள். 

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 11:17 am

DIN

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள். 

கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. 

ஐபிஎல் போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்கள் என்று இரு கிரிக்கெட் வாரியங்களும் பிசிசிஐக்குத் தகவல் தெரிவித்துள்ளன. இதனால் ஐபிஎல் அணிகள் மகிழ்ச்சியாக உள்ளன. இதையடுத்து ஐபிஎல் போட்டியில் பங்கேற்க விருப்பப்படும் ஆஸி. மற்றும் இங்கிலாந்து வீரர்கள் தங்களுடைய முடிவை அணிகளிடம் தெரிவித்து வருகிறார்கள். கரோனா தடுப்பு பாதுகாப்பு வளையம் காரணமாக சில வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவுள்ளார்கள். இதையடுத்து சாம் கரண், மொயீன் அலி, ஜேசன் பெஹ்ரென்டார்ஃப் ஆகியோரை சிஎஸ்கே அணியில் மீண்டும் காண ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

கொல்கத்தா அணியில் விளையாடும் இயன் மார்கன், ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதாகக் கூறியுள்ளார். எனினும் செப்டம்பர் மாதம் 2-வது குழந்தை பிறக்கவுள்ளதால் தன்னால் கலந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடும் இங்கிலாந்து வீரர் பட்லர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.