பஞ்சாப் அணியில் மேலும் விளையாட விருப்பம் இல்லை என அந்த அணியின் கேப்டனாக இருந்த கே.எல். ராகுல் தெரிவித்ததால் அவரைத் தக்க வைக்க முடியாமல் போய்விட்டது. மயங்க் அகர்வால், அர்ஷ்தீப் சிங் என இருவரை மட்டும் பஞ்சாப் அணி தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இதனால் ஐபிஎல் 2022 போட்டியில் வேறொரு அணியில் விளையாடப் போகிறார் கே.எல். ராகுல்.
2020 ஐபிஎல் போட்டியில் அஸ்வினுக்குப் பதிலாக கே.எல். ராகுல், பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். பேட்டிங்கில் அவர் சிறப்பாக விளையாடினாலும் தனது அணியை பிளேஆஃப்புக்குக் கொண்டு செல்லத் தவறினார். தற்போது, ஐபிஎல் போட்டியில் புதிதாக இடம்பிடித்துள்ள லக்னெள அணியில் கே.எல். ராகுல் இடம்பெறப் போகிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பஞ்சாப் இணை உரிமையாளர் நெஸ் வாடியா பேட்டியளித்ததாவது:
கே.எல். ராகுலைத் தக்கவைக்க விரும்பினோம். ஆனால் அவர் ஏலத்தில் பங்கேற்க விருப்பப்பட்டார். அதற்கு முன்பு இன்னொரு அணி அவரை அணுகியிருந்தால் அது நெறிமுறையற்றது. லக்னெள அணி ராகுலை அணுகியிருக்க மாட்டார்கள் என எண்ணுகிறோம். இது பிசிசிஐயின் விதிகளுக்கு முரணானது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


