ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆஷஸ் டெஸ்ட்: 4 ’நோ பால்கள்’, கண்டுகொள்ளாத நடுவர்

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 4 ‘நோ பால்களை’ நடுவர் காணாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

News image
வார்னர் ஆட்டமிழந்த போது..
Updated On :9 டிசம்பர் 2021, 9:53 am

DIN

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 4 ‘நோ பால்களை’ நடுவர் காணாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையேயான முதல் ஆஷஸ் டெஸ்ட் பிரிஸ்பனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் பேட்டிங்கை தொடர்ந்த இங்கிலாந்து அணி 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய ஆஸி,. அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்களை எடுத்திருக்கிறது. 

மேலும் , இன்றைய ஆட்டத்தில் ஆஸி,. பேட்ஸ்மேன் வார்னர் ஆட்டமிழந்தபோது 3-வது நடுவரால் பந்துவீச்சு கவனிக்கப்பட்டது. இதில் பந்து வீசிய பென் ஸ்டோக்ஸ் கோட்டைத் தாண்டி காலை வைத்து ‘நோ பால்’ வீசியது உறுதியானது. இருப்பினும் வார்னர் ஆட்டமிழந்ததாக அறிவித்தனர்.

பின் , அதற்கு முன் வீசிய பந்துகளை பார்த்த போது தொடர்ந்து ஸ்டோக்ஸ் 4 ‘நோ பால்’களை வீசியது தெரியவந்தது.

இதனால் , 4 ’நோ பால்களை’  ஒருமுறை கூட நடுவர்  கவனிக்காதது ஆஸி,. ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதைத் தாண்டி, இந்த ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் 14 நோ பால் வீசியிருக்கிறார் , அதில் 1 நோ பால் மட்டுமே நடுவரால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.