ஆஷஸ் டெஸ்ட்: 4 ’நோ பால்கள்’, கண்டுகொள்ளாத நடுவர்

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 4 ‘நோ பால்களை’ நடுவர் காணாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வார்னர் ஆட்டமிழந்த போது..
வார்னர் ஆட்டமிழந்த போது..

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 4 ‘நோ பால்களை’ நடுவர் காணாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையேயான முதல் ஆஷஸ் டெஸ்ட் பிரிஸ்பனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் பேட்டிங்கை தொடர்ந்த இங்கிலாந்து அணி 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய ஆஸி,. அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்களை எடுத்திருக்கிறது. 

மேலும் , இன்றைய ஆட்டத்தில் ஆஸி,. பேட்ஸ்மேன் வார்னர் ஆட்டமிழந்தபோது 3-வது நடுவரால் பந்துவீச்சு கவனிக்கப்பட்டது. இதில் பந்து வீசிய பென் ஸ்டோக்ஸ் கோட்டைத் தாண்டி காலை வைத்து ‘நோ பால்’ வீசியது உறுதியானது. இருப்பினும் வார்னர் ஆட்டமிழந்ததாக அறிவித்தனர்.

பின் , அதற்கு முன் வீசிய பந்துகளை பார்த்த போது தொடர்ந்து ஸ்டோக்ஸ் 4 ‘நோ பால்’களை வீசியது தெரியவந்தது.

இதனால் , 4 ’நோ பால்களை’  ஒருமுறை கூட நடுவர்  கவனிக்காதது ஆஸி,. ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதைத் தாண்டி, இந்த ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் 14 நோ பால் வீசியிருக்கிறார் , அதில் 1 நோ பால் மட்டுமே நடுவரால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com