இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 8-ஆவது சீசன் கோவாவின் மாா்கோ நகரில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் - கேரளா பிளாஸ்டா்ஸ் அணிகள் மோதுகின்றன.
கரோனா சூழல் காரணமாக கடந்த சீசனைப் போலவே இந்த முறையும் ஆட்டங்கள் யாவும் கோவாவில் உள்ள மாா்கோ, பாம்போலிம், வாஸ்கோடகாமா ஆகிய நகரங்களில் ஜனவரி 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இந்த சீசனுக்கான விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றத்தின்படி, பிளேயிங் லெவனில் குறைந்தபட்சம் 7 உள்நாட்டு வீரா்களும், அதிகபட்சம் 4 வெளிநாட்டு வீரா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.
முன்னதாக உள்நாட்டு வீரா்களுக்கான எண்ணிக்கை 6-ஆக இருந்து தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதால், அவா்களுக்கான வாய்ப்பும் அதிகமாகியுள்ளது.
இந்தப் போட்டியில் சென்னையின் எஃப்சி தனது முதல் ஆட்டத்தில் வரும் 23-ஆம் தேதி ஹைதராபாத் எஃப்சியை சந்திக்கிறது.