தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சிறந்த கால்பந்து வீரருக்கான பேலன் தோர் விருதை மீண்டும் வென்றார் மெஸ்ஸி!

சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் விருதான பேலன் தோர்...

News image
Updated On :30 நவம்பர் 2021, 12:05 pm

சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் விருதான பேலன் தோர் (Ballon d'Or) விருதை 7-வது முறையாக லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார். 

பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் பிரான்ஸ் ஃபுட்பால் என்கிற பத்திரிகை சார்பில் 1956 முதல் ஆண்டுதோறும் பேலன் தோர் விருது வழங்கப்படுகிறது. பல்வேறு தரப்பினரிடம் நடத்தப்படும் வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த விருதுக்குரியவர் தேர்வு செய்யப்படுகிறார். 2021-ம் ஆண்டுக்கான பேலன் தோர் விருது மெஸ்ஸிக்குக் கிடைத்துள்ளது.

2009, 2010, 2011, 2012, 2015, 2019, 2021 என 7 ஆண்டுகளில் இவ்விருதை மெஸ்ஸி வென்றுள்ளார். போலந்து நாட்டைச் சேர்ந்த ராபர்ட் லிவான்டாவ்ஸ்கியைத் தோற்கடித்து இவ்விருதை அவர் கைப்பற்றியுள்ளார். மகளிருக்கான  பேலன் தோர் விருதை ஸ்பெயினின் அலெக்ஸியா வென்றுள்ளார். 

சமீபத்தில் பார்சிலோனா அணியிலிருந்து விலகிய மெஸ்ஸி, பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் கிளப்பில் இணைந்தார். 

மனைவி, மகன்களுடன் மெஸ்ஸி

மனைவி, மகன்களுடன் மெஸ்ஸி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.