இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் பங்கேற்கிறது.
டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது.
டாஸ் வென்ற ஆஸி. அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ஹர்மன்ப்ரீத் கெளர் தலைமையிலான இந்திய மகளிர் அணியில் ரேணுகா சிங், யாஷ்திகா பாட்டியா என இருவர் டி20 கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார்கள். அதேபோல ஆஸி. அணியிலும் தஹ்லியா மெக்ராத், டார்லிங்டன் என இருவர் அறிமுகமாகியுள்ளார்கள்.