துபை வந்தடைந்த சிஎஸ்கே வீரர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, சேத்தேஷ்வர் புஜாரா மற்றும் மொயீன் அலி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை துபை வந்தடைந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, சேத்தேஷ்வர் புஜாரா மற்றும் மொயீன் அலி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை துபை வந்தடைந்தனர்.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஐபிஎல் அணி நிர்வாகங்கள் தங்களது வீரர்களை ஐக்கிய அரபு அமீரகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கின. சிஎஸ்கே வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, சேத்தேஷ்வர் புஜாரா மற்றும் மொயீன் அலி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை துபை வந்தடைந்தனர்.

அவர்கள் அடுத்த 6 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளனர். அதன்பிறகு, அணியின் மற்ற வீரர்களுடன் இணைவார்கள்.

இதனிடையே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் விராட் கோலி மற்றும் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஆகியோரும் ஞாயிற்றுக்கிழமை துபை வந்தடைந்தனர். அவர்களும் 6 நாள்கள் தனிமையில் இருந்து, பின்னர் மற்ற வீரர்களுடன் இணைவார்கள்.

இந்தியாவில் நடைபெற்ற 14-வது ஐபிஎல் சீசன் கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மே மாதம் பாதியிலேயே தற்காலிகமாக தடைபட்டது. இதைத் தொடர்ந்து, மீதமுள்ள ஆட்டங்கள் செப்டம்பர் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகின்றன. துபையில் 13 ஆட்டங்கள், ஷார்ஜாவில் 10 ஆட்டங்கள் மற்றும் அபுதாபியில் 8 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

இதன் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் துபையில் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com