/

செஸ் ஒலிம்பியாட்: மகளிர் ஏ அணி வைஷாலி வெற்றி

நடப்பாண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 6வது சுற்றில் இந்திய மகளிர் ஏ அணியில் இடம் பெற்றுள்ள வைஷாலி வெற்றி பெற்றார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:58 am

DIN


நடப்பாண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 6வது சுற்றில் இந்திய மகளிர் ஏ அணியில் இடம் பெற்றுள்ள வைஷாலி வெற்றி பெற்றார். 

வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடிய வைஷாலி, ஜார்ஜியவின் ஜவகிஷ்விலி லேலாவை எதிர்கொண்டபோது 36வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் ஜார்ஜியா அணியை இந்திய மகளிர் ஏ அணி 3:1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது.]

படிக்க செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீரர் குகேஷ் வெற்றி
 
சர்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே), அகில இந்திய செஸ் சம்மேளனம் (ஏஐசிஎஃப்), தமிழ்நாடு அரசு இணைந்து முதன்முறையாக இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துகின்றன.

சென்னைக்கு அருகேவுள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்ற்ன. ஆகஸ்ட் 10 வரை செஸ் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. 

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சோ்ந்த 2,500 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.