47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

செஸ் ஒலிம்பியாட் அரங்கை மீண்டும் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஒலிம்பியாட் ஏற்பாடுகளை அடிக்கடி வந்து பார்வையிடுவது சர்வதேச அளவில் பாராட்டு பெற்றுள்ள இந்தப் போட்டி...

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 10:49 am

DIN

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகின்றன. விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கடந்த வாரம் நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.

மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாடின் 7-வது சுற்றில் இந்திய அணிகள் வழக்கம் போல் தனது வெற்றிப் பயணத்தைத் தொடா்ந்தன. ஓபன் பிரிவில் இந்தியா பி, இந்தியா ஏ அணிகள் 3 மற்றும் 4-வது இடங்களையும் இந்தியா சி அணி 19-வது இடத்தையும் பிடித்துள்ளன. மகளிர் பிரிவில் இந்தியா ஏ அணி முதலிடத்தில் உள்ளது. இந்தியா சி, இந்தியா பி அணிகள் 11 மற்றும் 31-வது இடங்களில் உள்ளன. 

ஏழு சுற்றுகள் முடிவடைந்த நிலையில் சென்னை செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் மாமல்லபுரத்துக்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், போட்டிக்கான ஏற்பாடுகளை மீண்டும் பார்வையிட்டார். கடந்த ஞாயிறன்றும் மாமல்லபுரத்துக்கு வருகை தந்து, ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் இடத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின். அப்போது, பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்துடனும் அவர் கலந்துரையாடினார். ஒலிம்பியாடில் விளையாடும் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த 8 வயது வீராங்கனை ராண்டா செடரைப் பாராட்டி விட்டு சென்றார் ஸ்டாலின். 

இந்நிலையில் முதல்வர் செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் அரங்கத்துக்கு வந்து பார்வையிடுவது அவருடைய ஈடுபாட்டை வெளிப்படுத்துவதாக அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் தலைவர் சஞ்சய் கபூர் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் முதல்வரின் புகைப்படங்களைப் பகிர்ந்து அவர் கூறியதாவது:  முன்னே இருந்து வழிநடத்தும் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், சென்னை ஒலிம்பியாட் அரங்கத்துக்கு மீண்டும் வருகை தந்தார். அவருடைய பணிச்சூழலில் ஒலிம்பியாட் ஏற்பாடுகளை அடிக்கடி வந்து பார்வையிடுவது சர்வதேச அளவில் பாராட்டு பெற்றுள்ள இந்தப் போட்டி மீதான அவருடைய ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.