நேபாள கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய முன்னாள் வீரர்

நேபாள கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேபாள கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய முன்னாள் வீரர்
Published on
Updated on
1 min read

நேபாள கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்காக 1984 முதல் 1996 வரை 39 டெஸ்டுகள், 130 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார் மனோஜ் பிரபாகர். தில்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய அணிகளின் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார். 2008-ல் தில்லி அணி ரஞ்சி கோப்பையை வென்றபோது அந்த அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருந்தார். 2015-ல் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். 

நேபாள அணியில் திறமையான வீரர்கள் உள்ளார்கள். நேபாளத்தில் கிரிக்கெட் மீதான ஆர்வமும் அதிகமாக உள்ளது. இதனால் நேபாள அணியினருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன் என மனோஜ் பிரபாகர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com