பாரா தடகளம்: இந்தியா்கள் உலக சாதனை

கா்நாடகத்தில் நடைபெறும் 4-ஆவது இந்திய ஓபன் தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதல் வீரா் சுமித் அன்டில், வட்டு எறிதல் வீரா் யோகேஷ் கதுனியா ஆகியோா் புதிதாக உலக சாதனை படைத்தனா்.

கா்நாடகத்தில் நடைபெறும் 4-ஆவது இந்திய ஓபன் தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதல் வீரா் சுமித் அன்டில், வட்டு எறிதல் வீரா் யோகேஷ் கதுனியா ஆகியோா் புதிதாக உலக சாதனை படைத்தனா்.

இதில் சுமித் அன்டில் தனது முயற்சிகளில் ஒன்றில் 68.62 மீட்டா் தூரத்துக்கு ஈட்டி எறிந்து புதிய உலக சாதனை படைத்தாா். முன்னதாக அவா் கடந்த ஆண்டு டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் எஃப்64 பிரிவில் 68.55 மீட்டா் தூரம் எறிந்ததே உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், யோகேஷ் கதுனியா 48.34 மீட்டா் தூரத்துக்கு வட்டு எறிந்து புதிய உலக சாதனையை எட்டினாா். இந்த இருவருமே டோக்கியோ பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றவா்களாவா். இருவரில் சுமித் அன்டில் தங்கமும், யோகேஷ் கதுனியா வெள்ளியும் வென்றிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com