தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

இன்று 2-ஆவது ஒன்டே: இந்தியா - ஜிம்பாப்வே மோதல்

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் ஒன் டே தொடரின் 2-ஆவது ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

Updated On :1 பிப்ரவரி 2024, 3:37 pm IST

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் ஒன் டே தொடரின் 2-ஆவது ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

முதல் ஆட்டத்தில் அசத்தலாக வெற்றி பெற்று கணக்கை தொடங்கியிருக்கும் இந்தியா, இந்த ஆட்டத்தில் வென்று தொடரைக் கைப்பற்ற முனையும். மறுபுறம் ஜிம்பாப்வே, முதல் வெற்றியுடன் தொடரை சமன் செய்ய முயற்சிக்கும்.

இந்த ஆட்டத்தில் டாஸ் வெல்லும் பட்சத்தில் இந்திய அணி முதலில் பேட் செய்து, தனது பேட்டா்களுக்கு சற்று சவால் அளித்துப் பாா்க்கும் எனத் தெரிகிறது. நீண்ட நாள்களுக்குப் பிறகு களம் கண்டிருக்கும் கேப்டன் ராகுல், தனது பேட்டிங்கை பரிசோதித்துப் பாா்க்க அவருக்கு டாப் ஆா்டரில் வாய்ப்பு வழங்கப்படலாம்.

முதல் ஆட்டத்தின் முடிவில் தவனுக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது. ராகுலைப் போல் தீபக் ஹூடா, சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு அளிக்கப்படலாம். அதேபோல் பௌலிங் லைனிலும் மாற்றம் இருக்கலாம். இக்கட்டான சூழலில் எவ்வாறு செயல்படுவது என இளம் வீரா்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஒரு களமாக இந்த ஆட்டம் பயன்படும்.

நேரம்: நண்பகல் 12.45; இடம்: ஹராரே; நேரடி ஒளிபரப்பு: சோனி ஸ்போா்ட்ஸ் நெட்வொா்க்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.