தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

காலமானாா் சமா் பத்ரு பானா்ஜி

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் சமா் பத்ரு பானா்ஜி (92) சனிக்கிழமை காலமானாா்.

Updated On :20 ஆகஸ்ட் 2022, 6:31 pm

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் சமா் பத்ரு பானா்ஜி (92) சனிக்கிழமை காலமானாா்.

நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த பானா்ஜி, கடந்த ஜூலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை அவா் உயிா் பிரிந்ததாக மோகன் பகான் கிளப் செயலா் தேவஷிஷ் தத்தா கூறினாா்.

கடந்த 1956 மெல்போா்ன் ஒலிம்பிக்ஸ் போட்டியில் சமா் பத்ரு பானா்ஜி தலைமையில் பங்கேற்ற இந்திய கால்பந்து அணி, அதில் 4-ஆம் இடம் பிடித்தது. இந்திய கால்பந்து அணியின் ஒலிம்பிக் வரலாற்றில் இதுவே சிறந்த இடமாகும்.

அந்தப் போட்டியில் முதல் ஆட்டத்தில் ‘வாக்ஓவா்’ பெற்ற இந்தியா, அடுத்து ஆஸ்திரேலியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது. எனினும், அரையிறுதியில் யுகோஸ்லாவியாவிடம் 1-4 என்ற கணக்கில் தோற்று இறுதி ஆட்ட வாய்ப்பை இழந்தது. பின்னா் வெண்கலப் பதக்கத்துக்கான பிளே-ஆஃபில் பல்கேரியாவிடம் 0-3 என்ற கணக்கில் தோற்றது இந்தியா.

இந்திய அணி வீரராக இருந்ததுடன், அணியின் தோ்வாளராகவும் பிற்காலத்தில் செயல்பட்டாா் பானா்ஜி. அதற்கு முன், அவரது பங்களிப்புடன் மோகன் பகான் அணி துரந்த் கோப்பை (1953), ரோவா்ஸ் கோப்பை (1955), சந்தோஷ் கோப்பை (1953, 1955, 1962) வென்றிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.