5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

நடுவரின் தீர்ப்பால் சர்ச்சை, அதிர்ச்சியில் இலங்கை வீரர்கள்

ஆசியக் கோப்பையின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து வரும் இலங்கை அணி வீரர்கள் நடுவரின் சர்ச்சைக்குரிய தீர்ப்பால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2022, 8:29 pm IST

ஆசியக் கோப்பையின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து வரும் இலங்கை அணி வீரர்கள் நடுவரின் சர்ச்சைக்குரிய தீர்ப்பால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆசியக் கோப்பையின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்ததையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரை வீசிய ஃபரூக்கி இலங்கை அணியின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

ஃபரூக்கியின் முதல் ஓவரில் குசால் மெண்டிஸ் மற்றும் சாரித் அசலங்கா விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். இதனையடுத்து, அடுத்த ஓவரிலேயே இலங்கை அணி அடுத்த விக்கெட்டினை இழந்தது. பதும் நிசங்கா வீக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் அவர் நடுவரின் முடிவை ரிவியூ செய்தார். ரிவியூ செய்து பார்க்கையில் பந்து பேட்டில் படாமல் சென்றதுபோல் தெரிந்தது. அதனால் இலங்கை அணி நிம்மதியடைந்தது. ஆனால், மூன்றாம் நடுவர் அவுட் என அறிவிக்க இலங்கை அணியினர் மட்டுமின்றி மைதானத்தில் இருந்த இலங்கை அணியின் ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

மூன்றாம் நடுவரின் இந்த தீர்ப்பு இலங்கை அணிக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், வேறு வழியின்றி நடுவரின் தீர்ப்பை ஏற்று பதும் நிசங்கா ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.