துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

நடுவரின் தீர்ப்பால் சர்ச்சை, அதிர்ச்சியில் இலங்கை வீரர்கள்

ஆசியக் கோப்பையின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து வரும் இலங்கை அணி வீரர்கள் நடுவரின் சர்ச்சைக்குரிய தீர்ப்பால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:40 pm IST

ஆசியக் கோப்பையின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து வரும் இலங்கை அணி வீரர்கள் நடுவரின் சர்ச்சைக்குரிய தீர்ப்பால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆசியக் கோப்பையின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்ததையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரை வீசிய ஃபரூக்கி இலங்கை அணியின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

ஃபரூக்கியின் முதல் ஓவரில் குசால் மெண்டிஸ் மற்றும் சாரித் அசலங்கா விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். இதனையடுத்து, அடுத்த ஓவரிலேயே இலங்கை அணி அடுத்த விக்கெட்டினை இழந்தது. பதும் நிசங்கா வீக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் அவர் நடுவரின் முடிவை ரிவியூ செய்தார். ரிவியூ செய்து பார்க்கையில் பந்து பேட்டில் படாமல் சென்றதுபோல் தெரிந்தது. அதனால் இலங்கை அணி நிம்மதியடைந்தது. ஆனால், மூன்றாம் நடுவர் அவுட் என அறிவிக்க இலங்கை அணியினர் மட்டுமின்றி மைதானத்தில் இருந்த இலங்கை அணியின் ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

மூன்றாம் நடுவரின் இந்த தீர்ப்பு இலங்கை அணிக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், வேறு வழியின்றி நடுவரின் தீர்ப்பை ஏற்று பதும் நிசங்கா ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.