தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இந்திய வீரர்கள் 4 பேருக்கு கரோனா: மாற்று வீரராக மயங்க் அகர்வால் தேர்வு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், மாற்று வீரராக மயங்க் அகர்வாலை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.

News image
பிசிசிஐ
Updated On :3 பிப்ரவரி 2022, 2:50 am

DIN


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், மாற்று வீரராக மயங்க் அகர்வாலை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.

இதுபற்றி பிசிசிஐ வெளியிட்ட செய்தியில்:

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான ஒருநாள் தொடர் பிப்ரவரி 6-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக இந்திய வீரர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர், நவ்தீப் சைனி மற்றும் ஷிகர் தவான் ஆகிய நான்கு வீரர்கள் மற்றும் அணியின் உதவியாளர்கள் மூவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மயங்க் அகர்வாலை இந்திய சீனியர் அணியின் தேர்வுக் குழு அணியில் சேர்த்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.