மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தனிமை முடிந்தது: பயிற்சியில் ராகுல், அகர்வால், சைனி

தனிமையில் இருந்த இந்திய வீரர்கள் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் இன்று (திங்கள்கிழமை) பயிற்சியில் ஈடுபட்டனர்.

News image
கோப்புப்படம்
Updated On :7 பிப்ரவரி 2022, 4:24 pm

DIN


தனிமையில் இருந்த இந்திய வீரர்கள் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் இன்று (திங்கள்கிழமை) பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கேஎல் ராகுல் முதல் ஆட்டத்தில் விளையாடமாட்டார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், தனிமைப்படுத்தப்பட்டனர். மாற்று வீரராக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டார்.

2-வது ஒருநாள் ஆட்டம் புதன்கிழமை தொடங்கவுள்ள நிலையில் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் மற்று நவ்தீப் சைனி ஆகியோர் தனிமைக் காலம் முடிந்து இன்று பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சிப் புகைப்படங்களை பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாகப் பந்துவீசிய யுஸ்வேந்திர சஹால் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.