கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பத்திரிகையாளரின் பெயரைக் கூற மாட்டேன்: சஹா திட்டவட்டம்

ஊடகத்தில் இப்படியொருவர் இருக்கிறார், இதுபோல மீண்டும் ஒருவர் செய்யக்கூடாது என்பதற்காகவே...

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 8:43 am

DIN

பேட்டியளிக்காத காரணத்துக்காகத் தன்னை மிரட்டிய பத்திரிகையாளரின் பெயரைக் கூற மாட்டேன் என விக்கெட் கீப்பர் சஹா தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலியின் விலகலையடுத்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மூத்த வீரர்களான ரஹானேவும் புஜாராவும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். சஹா, இஷாந்த் சர்மா ஆகியோருக்கும் அணியில் இடமளிக்கப்படவில்லை. 

இந்திய அணியில் தன்னைச் சேர்த்துக்கொள்ளாதது பற்றி அதிருப்தி தெரிவித்துள்ள சஹா, பிரபல பத்திரிகையாளர் ஒருவருக்குத் தான் பேட்டியளிக்க மறுத்ததால் தன்னை அவர் குறுந்தகவல் வழியாக மிரட்டியதாகவும் பரபரப்பு புகார் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அந்தப் பத்திரிகையாளர் அனுப்பிய வாட்சப் தகவலையும் ட்விட்டரில் நேற்று பகிர்ந்தார். இதையடுத்து அந்தப் பத்திரிகையாளரின் பெயரை சஹா வெளியிடவேண்டும் என்று பல கிரிக்கெட் வீரர்களும் சஹாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இதுபற்றி பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியதாவது:

சஹாவிடம் அவருடைய ட்வீட் பற்றியும் என்ன நடந்தது என்பது பற்றியும் கேள்வி கேட்போம். அவர் மிரட்டப்பட்டாரா, அந்த ட்வீட்டின் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை செய்வோம். இப்போது அதிகமாகக் கூறமுடியாது. செயலாளர் (ஜெய் ஷா) சஹாவிடம் நிச்சயம் பேசுவார் என்றார். 

இந்நிலையில் தன்னை மிரட்டிய பத்திரிகையாளரின் பெயரைக் கூற மாட்டேன் என விக்கெட் கீப்பர் சஹா தெரிவித்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

பிசிசிஐயிடமிருந்து எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை. பெயரைக் கூறும்படி பிசிசிஐ கேட்டால், ஒருவரைக் கீழே தள்ள, யாருடைய வேலையிலும் பாதிப்பை ஏற்படுத்துவது என்னுடைய எண்ணமல்ல எனத் தெரிவிப்பேன். அதனால் தான் ட்விட்டரில் பெயரைத் தெரிவிக்கவில்லை. என் பெற்றோர் அப்படிச் சொல்லி என்னை வளர்க்கவில்லை. ஊடகத்தில் இப்படியொருவர் இருக்கிறார், இதுபோல மீண்டும் ஒருவர் செய்யக்கூடாது என்பதற்காகவே அந்த ட்வீட்டை வெளியிட்டேன். அவர் செய்தது நியாயமல்ல என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.