புரோ கபடி லீக் போட்டி 8-ஆவது சீசன் இறுதிச்சுற்றில் பாட்னா பைரேட்ஸ் - தபங் தில்லி அணிகள் வெள்ளிக்கிழமை (பிப். 25) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
முன்னதாக, புதன்கிழமை நடைபெற்ற அரையிறுதிச்சுற்று ஆட்டங்களில் பாட்னா பைரேட்ஸ் 38-27 என்ற புள்ளிகள் கணக்கில் யுபி யோதாவையும், தபங் தில்லி 40 - 35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸையும் தோற்கடித்தன.
இதில் பாட்னா அணி 16 ரெய்டு புள்ளிகள், 16 டேக்கிள் புள்ளிகள், 6 ஆல்அவுட் புள்ளிகள் பெற, யுபி 15 ரெய்டு புள்ளிகள், 9 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல்அவுட் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி பெற்றன. மறுபுறம் தபங் தில்லி 23 ரெய்டு புள்ளிகள், 2 சூப்பா் ரெய்டு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல்அவுட் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகளை கைப்பற்ற, பெங்களூரு 24 ரெய்டு புள்ளிகள், 9 டேக்கிள் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது.