ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆளில்லா மைதானத்தில் கோலியின் 100-வது டெஸ்ட்

இந்தியா, இலங்கை இடையிலான டெஸ்ட் தொடரை நேரில் காண பார்வையாளர்களுக்கு பிசிசிஐ அனுமதி மறுத்துள்ளது.

News image
Updated On :26 பிப்ரவரி 2022, 10:39 am

DIN


இந்தியா, இலங்கை இடையிலான டெஸ்ட் தொடரை நேரில் காண பார்வையாளர்களுக்கு பிசிசிஐ அனுமதி மறுத்துள்ளது.

இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் மார்ச் 4-ம் தேதி தொடங்குகிறது. இது விராட் கோலியின் 100-வது டெஸ்ட். இந்த தொடருக்கு பார்வையாளர்கள் அனுமதி மறுக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் கிரிக்கெட் சங்க பொருளாளர் ஆர்பி சிங்கலா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியதாவது:

"பிசிசிஐ வழிகாட்டுதலின்படி டெஸ்ட் ஆட்டத்தைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மொகாலியில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில், ரசிகர்கள் நிச்சயம் இதைத் தவறவிடுவார்கள்.

ஆனால், மொகாலியைச் சுற்றி இன்னும் கரோனா பாதிப்புகள் அதிகரிக்கின்றன. எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதுவே சிறந்தது. எனினும், பிசிசிஐ வழிகாட்டுதலின்படி ஆட்டத்தின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ விராட் கோலியை கௌரவிக்க பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது" என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.