மீண்டும் ஏமாற்றிய விராட் கோலி

நீண்ட நாட்களாக மோசமாக விளையாடிவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீண்டும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். 
மீண்டும் ஏமாற்றிய விராட் கோலி
Updated on
1 min read

நீண்ட நாட்களாக மோசமாக விளையாடிவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீண்டும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். 

இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று( ஜூலை1) தொடங்கியது. இதில் தொடக்க வீரர்களான சுப்மன் கில் புஜாரா 17, 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அடுத்து பெரிதும் எதிர்பார்த்த விராட் கோலி ஹனுமா விகாரியுடன் ஜோடி சேர்ந்து ஆடினார். 18 பந்தில் 2 பவுண்டரிகள் அடித்திருந்த நிலையில் பாட் வீசிய பந்தில் விளையாடாமல் இருக்க பேட்டை மேலே தோல்லும் போது துரதிஷ்டவசமாக எட்ஜ் வாங்கி போல்ட் ஆனார். ஒவ்வொரு முறையும் விராட் கோலி அவுட் ஆகும் போது ஏதாவது அதிர்ஷ்டமில்லாமலே அவுட் ஆகும் போக்கு தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. 

விராட் கோலியின் மோசமான ஆட்டம் தொடர்ந்துக் கொண்டே உள்ளது அவரது  ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

கடசியாக விராட் கோலி அடித்த சதம் 2019 ஆம் ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது. 3வது வருடமாக சதமடிக்காமல் ரசிகர்களை ஏமாற்றி வருகிறார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com