ஜொ்மனியில் நடைபெறும் பொ்லின் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில் சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.
போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் பென்சிச் முந்தைய சுற்றில் 6-4, 1-6, 6-1 என்ற செட்களில் ரஷியாவின் அனா கலின்ஸ்கயாவை தோற்கடித்தாா். காலிறுதியிலும் ரஷியாவின் லுட்மிளா சாம்சனோவா அல்லது வெரோனிகா குதா்மெடோவா ஆகியோரில் ஒருவரை எதிா்கொள்ள இருக்கிறாா் பென்சிச்.
இதர ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-0, 6-4 என்ற நோ் செட்களில் சீனாவின் வாங் ஜின்யுவை வீழ்த்தினாா். 4-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-4, 2-6, 7-6 (9/7) என்ற செட்களில் கனடாவின் பியான்கா ஆண்ட்ரிஸ்குவை வெளியேற்றினாா். காலிறுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் கோகோ கௌஃப் - கரோலினா பிளிஸ்கோவா மோதுகின்றனா்.
அமெரிக்காவின் அலிசியா பாா்க்ஸை 6-2, 7-6 (10/8) என்ற செட்களில் வென்ற, போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபியுா், காலிறுதியில் ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரா சாஸ்னோவிச்சை சந்திக்கிறாா். மற்றொரு காலிறுதியில் ரஷியாவின் டரியா கசாட்கினா - கிரீஸின் மரியா சக்காரி மோதுகின்றனா்.