தில்லி கேபிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக முன்னாள் சிஎஸ்கே வீரர் நியமனம்

ஐபிஎல் 2022 போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக முன்னாள் சிஎஸ்கே வீரர் ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தில்லி கேபிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக முன்னாள் சிஎஸ்கே வீரர் நியமனம்

ஐபிஎல் 2022 போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராக முன்னாள் சிஎஸ்கே வீரர் ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக 59  டெஸ்டுகள், 190 ஒருநாள், 58 டி20 ஆட்டங்களில் ஷேன் வாட்சன் விளையாடியுள்ளார். 2008 ஐபிஎல்-லில் போட்டியின் சிறந்த வீரராகத் தேர்வானார். ராஜஸ்தான் அணிக்காக 78 ஆட்டங்களில் விளையாடிய வாட்சன், இரு வருடங்கள் ஆர்சிபி அணிக்கு விளையாடி பிறகு 2018-ல் சிஎஸ்கேவுக்குத் தேர்வானார். அந்த ஆண்டு சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தார். இறுதிச்சுற்றில் 57 பந்துகளில் 117 ரன்கள் எடுத்தார். 2020 நவம்பரில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். 

ஐபிஎல் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பணியாற்றுகிறார். அந்த அணியில் பிரவீன் ஆம்ரே, அஜித் அகர்கர் ஆகியோர் உதவிப் பயிற்சியாளர்களாகவும் ஜேம்ஸ் ஹோப்ஸ் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் உள்ளார்கள்.  இந்நிலையில் தில்லி அணியின் மற்றொரு உதவிப் பயிற்சியாளராக ஆஸி. முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com