ஃபிஃபா-வின் 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் மொராக்கோவிடம் 0-3 என்ற கோல் கணக்கில் தோற்றது.
குரூப் சுற்றில் மொத்தம் 3 ஆட்டங்கள் விளையாடப்படும் நிலையில், இந்தியா 2-இல் தோல்வி கண்டு குரூப் ஏ-வில் கடைசி இடத்தில் இருக்கிறது. அமெரிக்கா, பிரேஸில், மொராக்கோ அணிகள் தலா 1 வெற்றியுடன் முறையே முதல் 3 இடங்களில் உள்ளன. எனவே, குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் வென்றாலும் இந்தியா 4-ஆவது இடத்திலேயே நீடிக்கும்.
ஒவ்வொரு குரூப்பிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகளே காலிறுதிக்கு முன்னேறும். எனவே, உலகக் கோப்பை போட்டியிலிருந்து இந்தியா வெளியேறும் நிலையில் இருக்கிறது. கடைசி ஆட்டத்தில் பிரேஸிலை திங்கள்கிழமை சந்திக்கிறது இந்தியா.