ஃபிஃபா-வின் 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் மொராக்கோவிடம் 0-3 என்ற கோல் கணக்கில் தோற்றது.
குரூப் சுற்றில் மொத்தம் 3 ஆட்டங்கள் விளையாடப்படும் நிலையில், இந்தியா 2-இல் தோல்வி கண்டு குரூப் ஏ-வில் கடைசி இடத்தில் இருக்கிறது. அமெரிக்கா, பிரேஸில், மொராக்கோ அணிகள் தலா 1 வெற்றியுடன் முறையே முதல் 3 இடங்களில் உள்ளன. எனவே, குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் வென்றாலும் இந்தியா 4-ஆவது இடத்திலேயே நீடிக்கும்.
ஒவ்வொரு குரூப்பிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகளே காலிறுதிக்கு முன்னேறும். எனவே, உலகக் கோப்பை போட்டியிலிருந்து இந்தியா வெளியேறும் நிலையில் இருக்கிறது. கடைசி ஆட்டத்தில் பிரேஸிலை திங்கள்கிழமை சந்திக்கிறது இந்தியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

60 நாள்களுக்குப் பின் ஆக.3-ல் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்! ஆனால்..பட்டியல்?

காமன்வெல்த்: ஜூடோ இறுதிப் போட்டியில் தவறுகளால் தங்கப் பதக்கத்தை இழந்த யாமினி!

கேரளத்தில் நிலச்சரிவு; எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கத் தயார்: வி.டி. சதீசன்

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!


