சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் சண்டிகர் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழக அணி.
லக்னெளவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழகம் - சண்டிகர் அணிகள் மோதின. டாஸ் வென்ற சண்டிகர் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. தமிழக அணி கேப்டன் பாபா அபரஜித் நன்கு விளையாடி 55 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்தார். தமிழக அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.
தமிழக அணி அற்புதமாகப் பந்துவீசியதால் சண்டிகர் அணி 18.1 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாக்மெந்தர் லேதர் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார். வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளும் நடராஜன், சந்தீப் வாரியர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்றுள்ளது தமிழகம். சண்டிகர் அணி 5 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றுள்ளது.