மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டி20 வெற்றியுடன் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைப் பாதுகாப்புடன் முடித்த ஆஸ்திரேலிய அணி

கடந்த ஒரு மாதமாக இரு அணிகளும் ரசிகர்களுக்கு அற்புதமான கிரிக்கெட் தருணங்களை வழங்கியுள்ளார்கள்.

News image
Updated On :6 ஏப்ரல் 2022, 8:35 am

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்று பாதுகாப்புடன் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டது ஆஸ்திரேலிய அணி.

பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடியுள்ளது ஆஸ்திரேலிய அணி. 1998-க்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு வந்ததால் இத்தொடரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

டெஸ்ட், ஒருநாள் தொடர்களுக்கு அடுத்ததாக இரு அணிகளுக்கிடையிலான ஒரு ஆட்டம் கொண்ட டி20 தொடர் லாகூரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாபர் ஆஸம் 46 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். ஆஸி. வீரர் நாதன் எல்லீஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி, 19.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஃபிஞ்ச் 55 ரன்கள் எடுத்தார்.  

பாகிஸ்தானில் டெஸ்ட், டி20 தொடர்களை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை வென்றது. 

Story image

கடந்த வருட செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் மூன்று ஒருநாள், 5 டி20 ஆட்டங்களை விளையாடத் திட்டமிட்டு பாகிஸ்தானுக்கு வந்தது நியூசிலாந்து அணி. முதல் ஒருநாள் ஆட்டம் செப்டம்பர் 17 அன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ஆட்டம் தொடங்க சில நிமிடங்கள் வரை இரு அணி வீரர்களும் மைதானத்துக்கு வரவில்லை, ரசிகர்களும் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அசாதாரணமான சூழல் நிலவியது. பிறகு, பாகிஸ்தானில் விளையாடவிருந்த ஒருநாள், டி20 தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தகவல் அளித்தது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்கிறோம். நியூசிலாந்து அணி வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்படும் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், தொடர் ரத்தானது குறித்து அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து பாகிஸ்தானில் இரு டி20 ஆட்டங்களில் விளையாடவிருந்த இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள். 

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் மறுத்ததால் ஆஸ்திரேலிய அணியும் தொடரை ரத்து செய்யுமா என பாகிஸ்தான் ரசிகர்கள் பயந்திருந்தார்கள். ஆனால் கடந்த ஒரு மாதமாக இரு அணிகளும் ரசிகர்களுக்கு அற்புதமான கிரிக்கெட் தருணங்களை வழங்கியுள்ளார்கள். இதனால் ஆஸ்திரேலிய அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் பாதுகாப்புடன் நிறைவடைந்துள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.