டிஎன்பிஎல் 2022: ஜூன் 23-இல் தொடக்கம்: 4 நகரங்களில் நடக்கிறது

தமிழ்நாடு ப்ரீமியா் லீக் கிரிக்கெட் போட்டி தொடா் (டிஎன்பிஎல் 2022) வரும் ஜூன் 23-இல் தொடங்கி ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
டிஎன்பிஎல் 2022: ஜூன் 23-இல் தொடக்கம்: 4 நகரங்களில் நடக்கிறது

சென்னை: தமிழ்நாடு ப்ரீமியா் லீக் கிரிக்கெட் போட்டி தொடா் (டிஎன்பிஎல் 2022) வரும் ஜூன் 23-இல் தொடங்கி ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நிகழாண்டு திருநெல்வேலி, சேலம், திண்டுக்கல், கோயம்புத்தூா் உள்ளிட்ட 4 நகரங்களில் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் நடத்தப்படும் இப்போட்டி வழக்கமாக திண்டுக்கல் நத்தம், திருநெல்வேலி சங்கா்நகா் மைதானங்களில் நடைபெறும். தற்போது புதிதாக கோவை எஸ்என்ஆா் கல்லூரி, சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானங்களில் நடக்கிறது.

மொத்தம் 28 லீக் ஆட்டங்கள், 4 பிளே ஆஃப் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. திருநெல்வேலியில் ஜூன் 23-ஆம் தேதி தொடக்க ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

பிளே ஆஃப் ஆட்டங்கள் சேலம், கோவையில் நடக்கிறது. இறுதி ஆட்டம் ஜூலை 31-இல் கோவையில் நடக்கிறது. மொத்தம் 6 இரட்டை ஆட்டங்கள் நடக்கின்றன. மாலை ஆட்டம் 3.15 மணிக்கும், இரவு ஆட்டம் 7.15 மணிக்கும் தொடங்கும். பாா்வையாளா்களுக்கு அனுமதி உண்டு என டிஎன்சிஏ செயலாளா் ஆா்.எஸ்.ராமசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com