காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

காமன்வெல்த்: பி.வி. சிந்துவுக்குத் தங்கம்

காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் பாட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து தங்கம் வென்றுள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:31 pm IST

காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் பாட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து தங்கம் வென்றுள்ளார்.

பிர்மிங்கமில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் இறுதிச்சுற்றில் கனடாவின் மிஷெல் லீயை எதிர்கொண்டார் இந்தியாவின் சிந்து. இதற்கு முன்பு இருவரும் விளையாடிய 10 ஆட்டங்களில் 8-ல் சிந்து வெற்றியடைந்திருந்தார். எனினும் காலில் ஏற்பட்ட காயத்துடன் அரையிறுதியில் அவர் விளையாடினார். இதனால் இறுதிச்சுற்றிலும் காயத்தால் அவருக்கு பாதிப்பு ஏற்படுமா என ரசிகர்கள் கவலைப்பட்டார்கள். 

இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் 21-15, 21-15 என வெற்றி பெற்று தங்கம் வென்றார் பி.வி. சிந்து. 2014 காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலம் வென்ற சிந்து, 2018-ல் வெள்ளிப் பதக்கம் வென்றார். தற்போது காமன்வெல்த் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் முதல்முறையாகத் தங்கம் வென்றுள்ளார். 

2022 காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா வெல்லும் 19-வது தங்கம் இது. இதுவரை 19 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என 56 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4-ம் இடத்தில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.