செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அடுத்ததாக அமெரிக்காவின் மியாமியில் நடைபெறும் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பைப் போட்டியில் விளையாடி வருகிறார் இந்தியாவின் பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தா.
முதல் சுற்றில் உலகின் நெ.1 ஜூனியர் வீரர் அலிரேஸா ஃபிரோஜாவை எதிர்கொண்டார் 17 வயது பிரக்ஞானந்தா. 4 ஆட்டங்கள் கொண்ட முதல் சுற்றில் 2.5-1.5 என வெற்றி பெற்றார். 8 வீரர்கள் விளையாடும் இந்தப் போட்டியில் கார்ல்சன் உள்பட மூன்று வீரர்களுடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளார் பிரக்ஞானந்தா.
இதற்கு முன்பு ஃபிரோஜாவுடனான எந்தவொரு ஆட்டத்திலும் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றது கிடையாது. இந்நிலையில் முதல்முறையாக அவரைத் தோற்கடித்துள்ளார்.
இன்று நடைபெறும் 2-வது சுற்றில் அனிஷ் கிரியை எதிர்கொள்கிறார் பிரக்ஞானந்தா. ஆகஸ்ட் 15 அன்று தொடங்கிய இப்போட்டி ஆகஸ்ட் 21 அன்று நிறைவுபெறுகிறது.