ஜிம்பாப்பேவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பந்துவீசுகிறது.
இந்திய அணி ஜிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இன்று ( ஆகஸ்ட் 18) தொடங்கும் ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 22-ல் நிறைவடைகிறது. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 எனவும் ஒருநாள் தொடரை 2-1 எனவும் ஜிம்பாப்வே ஜெயித்திருந்தது.
ஹராரேவில் நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கே.எல். ராகுல், ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷுப்மன் கில், இஷான் கிஷன், சிராஜ் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள்.
இந்திய அணி: கே.எல். ராகுல் (கேப்டன்), ஷிகர் தவன்,ஷுப்மன் கில், இஷான் கிஷன்,தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்ஷர் படேல், தீபக் சஹார், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, சிராஜ்.