மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி: தங்கம் வென்று லின்தோய் வரலாற்று சாதனை! 

உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த லின்தோய்  சனம்பம் முதன்முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.

தங்கம் வென்ற லின்தோய்  சனம்பம்

Published On :

உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த லின்தோய்  சனம்பம் முதன்முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.

சராஜூவோவில் நடைபெறும் உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவை சேர்ந்த 15வயது வீரங்கனை லின்தோய் சனம்பம். 

57கிலோ எடைப்பிரிவில் பிரேசிலை சேர்ந்த பியன்கா ரெய்ஸை 1-0 என்ற கணக்கில் வென்று இந்தியாவில் முதன்முறையாக ஜூடோ போட்டியில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். ஜூனியர் சீனியர் என்ற பிரிவிலும் உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

லின்தோய் சனம்பம் 2018இல் தேசிய அளவில் சப்-ஜூனியர் போட்டியில் முதன்முறையாக தங்கம் வென்றார். 2021 நவம்பர் சண்டீகரில் நேஷ்னல் சாம்பிய்ன்ஷிப் போட்டியிலும் தங்கம் வென்றார். இதனைத் தொடர்ந்து ஜூலை 2022இல் ஆசிய ஜீனியர் ஜூடோ போட்டியில் தங்கம் வென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி குறித்து லின்தோய் கூறியதாவது:

இந்த வெற்றியை என்னால் விவரிக்க முடியவில்லை. ஆனால் இந்த வெற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.