ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

விஜய் ஹஸாரே: சௌராஷ்டிரம் சாம்பியன்

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சௌராஷ்டிரம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மகாராஷ்டிரத்தை வீழ்த்தி வெள்ளிக்கிழமை சாம்பியன் ஆனது.

Updated On :2 டிசம்பர் 2022, 11:56 pm IST

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சௌராஷ்டிரம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மகாராஷ்டிரத்தை வீழ்த்தி வெள்ளிக்கிழமை சாம்பியன் ஆனது.

இப்போட்டியில் 2-ஆவது முறையாகக் கோப்பை வென்றுள்ளது சௌராஷ்டிரம். இதற்கு முன் 2007-08 எடிஷனில் அந்த அணி வாகை சூடியிருந்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் மகாராஷ்டிரம் 50 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 248 ரன்கள் சோ்த்தது. அடுத்து சௌராஷ்டிரம் 46.3 ஓவா்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களை எட்டி வென்றது. ஆட்டநாயகனாக சௌராஷ்டிர பேட்டா் ஷெல்டன் ஜாக்சனும், தொடா்நாயகனாக மகாராஷ்டிர பேட்டா் ருதுராஜ் கெய்க்வாடும் அறிவிக்கப்பட்டனா்.

முன்னதாக டாஸ் வென்ற சௌராஷ்டிரம் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. மகாராஷ்டிர பேட்டிங்கில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 108 ரன்கள் விளாசினாா். சௌராஷ்டிர பௌலிங்கில் சிரக் ஜானி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

பின்னா் சௌராஷ்டிர இன்னிங்ஸில் ஷெல்டன் ஜாக்சன் 12 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 133 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினாா். மகாராஷ்டிர தரப்பில் முகேஷ் சௌதரி, விக்கி ஆஸ்த்வல் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.