தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறை: கே.எல். ராகுல் என்ன சொல்கிறார்?

கிரிக்கெட் மாறிக் கொண்டிருக்கிறது. இப்படித்தான் விளையாட வேண்டும் என்பதில்லை.

News image
Updated On :12 டிசம்பர் 2022, 12:07 pm

DIN

இந்தியா - வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட், புதன் அன்று தொடங்குகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என வென்றது வங்கதேச அணி. 

இந்நிலையில் காயம் காரணமாக ரோஹித் சர்மா முதல் டெஸ்டில் இடம்பெறவில்லை. பும்ரா, ஷமி, ஜடேஜா ஆகியோரும் காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை. இதனால் கே.எல். ராகுல் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். உனாட்கட், அபிமன்யு ஈஸ்வரன், செளரப் குமார், நவ்தீப் சைனி ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் டெஸ்ட் தொடர் பற்றி செய்தியாளர்களிடம் கே.எல். ராகுல் கூறியதாவது:

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு நாம் தகுதி பெற வேண்டும். எனவே அதிரடியாக நாங்கள் விளையாட வேண்டும். இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது விளையாடிக் கொண்டிருப்பது பொறுப்பற்ற ஆட்டமல்ல. அவர்கள் தங்களுக்கென உருவாக்கிக்கொண்ட பாணியில் விளையாடுகிறார்கள். அதன்படி விளையாடும் வீரர்களுக்கு ஊக்கமளிக்கிறார்கள். கிரிக்கெட் மாறிக் கொண்டிருக்கிறது. இப்படித்தான் விளையாட வேண்டும் என்பதில்லை. இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் சுவாரசியமாக உள்ளது. வேகமாக ரன்கள் எடுக்கும் டெஸ்டைப் பார்க்க நன்றாக இருக்கிறது. பயமின்றி விளையாடுகிறார்கள். அதேபோல நாமும் விளையாட முடியாது. அவர்களுடைய திட்டங்களில் உள்ள சிலவற்றை நமக்கேற்றவாறு செய்து பார்க்கலாம். சூழலுக்கு ஏற்றவாறு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். 

ரோஹித் சர்மா எங்களுக்கு முக்கியமான வீரர். காயத்திலிருந்து விரைவில் குணமாகி 2-வது டெஸ்டில் விளையாடுவார் என நம்புகிறேன். புஜாரா துணை கேப்டனாகத் தேர்வானது பற்றி கேட்கிறீர்கள். துணை கேப்டன் எப்படித் தேர்வு செய்யப்படுகிறார் என எனக்குத் தெரியாது. இதனால் அணியில் எந்த மாற்றமும் இருக்காது. அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவருக்கான பொறுப்புகள் குறித்து தெரியும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.