இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் டி20 தொடரில் அனைத்து ஆட்டங்களுக்கும் பெண்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் 5 டி20 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கின்றன. நவி மும்பையில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தது இந்திய மகளிர் அணி. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. பெத் மூனி, டஹிலா மெக்ராத் ஆட்டமிழக்காமல் முறையே 82, 70 ரன்கள் எடுத்தார்கள். இந்தக் கடினமான இலக்கை நன்கு விரட்டிய இந்திய மகளிர் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டை செய்தது. இதன்பிறகு நடைபெற்ற சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி, 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்துத் தோற்றது. டி20 தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.
ஞாயிறன்று நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்துக்கு இலவச அனுமதி காரணமாகக் கிட்டத்தட்ட 45,000 ரசிகர்கள் வருகை தந்தார்கள். இந்தியாவில் இரு நாடுகளுக்கு இடையிலான மகளிர் கிரிக்கெட்டுக்கு இவ்வளவு ரசிகர்கள் வருகை தந்தது இதுவே முதல்முறை.
இந்நிலையில் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ள கடைசி 3 டி20 ஆட்டங்களிலும் பெண்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படுவதாக பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. 3-வது டி20 ஆட்டத்துக்கு மட்டும் ஆண்களுக்கு இலவச அனுமதி உண்டு. கடைசி இரு டி20 ஆட்டங்களிலும் ஆண்களுக்குச் சிறிய அளவிலான கட்டணம் வசூலிக்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
3-வது டி20 ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.
டெஸ்ட்: தீவிரப் பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்கள் (படங்கள்)
ஃபிஃபா உலகக் கோப்பை ஆட்டங்களைப் பார்க்காதே: கிரிக்கெட் வீரர்களுக்குப் பயிற்சியாளர் கட்டளை!
பல ஆட்டங்களில் நான் விளையாட மாட்டேன்: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அறிவிப்பு
புதிய நெருக்கடி: ராவல்பிண்டி ஆடுகளத்துக்கு ஐசிசி கொடுத்த மதிப்பீடு!