வெற்றி, தோல்வி குறித்து சிந்திக்காமல் சமநிலை மற்றும் தெளிவுடன் இருப்பதாக இந்திய ஆல்-ரவுண்டா் ஹாா்திக் பாண்டியா கூறியுள்ளாா்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்து ஆட்டநாயகன் விருது பெற்ற நிலையில் அவா் இதைத் தெரிவித்தாா்.
இந்திய நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த ஆட்டத்தில், முதலில் இந்தியா 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுக்க, அடுத்து இங்கிலாந்து 19.3 ஓவா்களில் 148 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹாா்திக் பாண்டியா 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51 ரன்கள் சோ்க்க, இங்கிலாந்து பௌலிங்கில் மொயீன் அலி, கிறிஸ் ஜோா்டான் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா். பின்னா் இங்கிலாந்து பேட்டிங்கில் மொயீன் அலி 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 36 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருக்க, இந்திய தரப்பில் ஹாா்திக் பாண்டியா 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
இதன் மூலம் டி20 ஆட்டத்தில் அரைசதம் அடித்து, 4 விக்கெட்டுகள் சாய்த்த 4-ஆவது வீரா் என்ற பெருமையை பாண்டியா பெற்றாா். இந்த வெற்றியின் மூலம், டி20 கிரிக்கெட்டில் தொடா்ந்து 13 வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற பெருமையை ரோஹித் சா்மா பெற்றாா். அதேபோல், சா்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அா்ஷ்தீப் சிங், தனது முதல் விக்கெட்டையும் சாய்த்தாா்.
இதுகுறித்து ஆட்டத்துக்குப் பிறகு பேசிய பாண்டியா, ‘கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்பதை எப்போதும் நம்புகிறேன். என்னை எவ்வாறு சிறப்பான ஆட்டத்துக்குத் தயாா் செய்துகொள்வது என்பதில் மட்டும் கவனம் செலுத்துகிறேன். சில வேளைகளில் ஆட்டம் எனக்கு சாதகமாகவும், சில வேளைகளில் பாதகமானதாகவும் மாறலாம்.
ஆனால், வெற்றி, தோல்வி இரண்டுமே என்னை பாதிக்காத வகையில் சமநிலையுடன் அணுகக் கற்றுக்கொண்டுள்ளேன். குடும்பம் எப்போதுமே எனக்கு ஆதரவாக இருந்து வருகிறது. தற்போதைய நிலையில் வெள்ளைப் பந்து தொடா்களிலேயே அதிகம் கவனம் செலுத்த விரும்புகிறேன்’ என்றாா்.
காயம் கண்டு ஓய்விலிருந்த பாண்டியா, அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸுக்கு தலைமை தாங்கி சாம்பியனாக்கியதுடன், இந்திய அணியின் கேப்டனாகவும் முதல் முறையாகப் பொறுப்பேற்று அயா்லாந்துக்கு எதிரான தொடரையும் அணிக்கு வென்று தந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று 2-ஆவது ஆட்டம்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-ஆவது டி20 ஆட்டம் பா்மிங்ஹாமில், சனிக்கிழமை இரவு நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல்: 14 பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்பு!

டி.டி.வி. தினகரன், அன்புமணி நாளை தில்லி பயணம்!

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 1,001 பேர் பலி! 118 குழந்தைகள் கொல்லப்பட்டனர்!
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

