மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

18 மாதங்களுக்குப் பிறகு சதமடித்த நட்சத்திர வீரர்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 18 மாதங்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் சதமடித்துள்ளார். 

Published On :

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 18 மாதங்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் சதமடித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர், ஃபேப் 4இல் முக்கியமான வீரருமான் ஸ்டீவன் ஸ்மித் 18 மாதங்களுக்குப் பிறகு சதம் அடித்துள்ளார். இது அவரது 28வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் போட்டியில் 28வது சதத்தை அடித்தப் பிறகு 8125 ரன்கள் எடுத்துள்ளார். விராட் கோலி 8074 ரன்களுடன் பின்தங்கியுள்ளார். ஜோ ரூட்க்குப் பிறகு அதிக ரன்களை எடுத்துள்ள ஃபேப் 4 வீரர்களில் 2வது இடத்தில் ஸ்மித் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

அட்டகாசமான 4 வீரர்களில் 28 சதங்களுடன் ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் சமநிலையில் உள்ளனர். விராட் கோலி 27 சதத்துடன் இருக்கிறார். வில்லியம்சன் 24 சதத்துடன் இருக்கிறார். 

இலங்கை ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் 298 ரன்கள் 5 விக்கெட்டுகள் இழந்திருந்தது. இதில் மார்னஸ் லபுசேன் சதமடித்து ஆட்டமிழந்தார். 

இரண்டாம் நாள் போட்டி தொடங்கியிருக்கிறது. தற்போது ஸ்மித் 130 ரன்களுடனும் மிட்செல் ஸ்டார்க் 1 ரன்னுடனும் களத்தில் விளையாடி வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.