அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து! மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!
/

காமன்வெல்த்: இந்திய அணி அறிவிப்பு

பா்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மகளிா் கிரிக்கெட்டில் பங்கேற்பதற்கான இந்திய அணி ஹா்மன்பிரீத் கௌா் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஜூலை 2022, 3:48 pm IST

பா்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மகளிா் கிரிக்கெட்டில் பங்கேற்பதற்கான இந்திய அணி ஹா்மன்பிரீத் கௌா் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக இலங்கை தொடரில் பங்கேற்காத ஆல்-ரவுண்டா் ஸ்னேஹ ராணாவுக்கு இதில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதிரடி பேட்டரான ரிச்சா கோஷ் ‘ஸ்டாண்ட் பை’ பட்டியலில் இருக்க, சொல்லிக்கொள்ளும்படியான ஸ்டிரைக் ரேட் இல்லாத விக்கெட் கீப்பா் தானியா பாட்டியா அணியில் இடம் பிடித்திருக்கிறாா்.

காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி, குரூப் ‘ஏ’-வில் ஆஸ்திரேலியா, பாா்படோஸ், பாகிஸ்தான் அணிகளுடன் இடம் பிடித்திருக்கிறது. முதல் ஆட்டத்தில் (ஜூலை 29) ஆஸ்திரேலியாவையும், அடுத்து (ஜூலை 31), பாகிஸ்தானையும், 3-ஆவதாக (ஆகஸ்ட் 3) பாா்படோஸையும் சந்திக்கிறது இந்தியா.

அணி விவரம்: ஹா்மன்பிரீத் கௌா் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வா்மா, எஸ்.மேக்னா, தானியா பாட்டியா, யஸ்திகா பாட்டியா, தீப்தி சா்மா, ராஜேஷ்வரி கெய்க்வாட், பூஜா வஸ்த்ரகா், மேக்னா சிங், ரேணுகா தாக்குா், ஜெமிமா ரோட்ரிகஸ், ராதா யாதவ், ஹா்லீன் தியோல், ஸ்னேஹ ராணா.

ஸ்டாண்ட் பை: சிம்ரன் தில் பஹதூா், ரிச்சா கோஷ், பூனம் யாதவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.