திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கே.எல். ராகுலுக்கு கரோனா: மே.இ. தீவுகள் தொடரில் விளையாடுவாரா?

பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :22 ஜூலை 2022, 1:47 pm IST

பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் அவர் விளையாடுவாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக கே.எல். ராகுல் விலகினார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களிலும் அவர் பங்கேற்கவில்லை. கடந்த மாத இறுதியில், ஜெர்மனியில் தனக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக ட்விட்டரில் அவர் தகவல் தெரிவித்தார். 

பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சை மேற்கொண்டு வந்த கே.எல். ராகுல், தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

உடற்தகுதியைக் கொண்டு மே.இ. தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் கே.எல். ராகுல் விளையாடுவார் என பிசிசிஐ அறிவித்திருந்தது. தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜூலை 29 முதல் தொடங்கும் டி20 தொடரில் கே.எல். ராகுல் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

இதையடுத்து ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கே.எல். ராகுல் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.