பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் அவர் விளையாடுவாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக கே.எல். ராகுல் விலகினார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களிலும் அவர் பங்கேற்கவில்லை. கடந்த மாத இறுதியில், ஜெர்மனியில் தனக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக ட்விட்டரில் அவர் தகவல் தெரிவித்தார்.
பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சை மேற்கொண்டு வந்த கே.எல். ராகுல், தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
உடற்தகுதியைக் கொண்டு மே.இ. தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் கே.எல். ராகுல் விளையாடுவார் என பிசிசிஐ அறிவித்திருந்தது. தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜூலை 29 முதல் தொடங்கும் டி20 தொடரில் கே.எல். ராகுல் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.
இதையடுத்து ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கே.எல். ராகுல் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



