அரையிறுதியில் இங்கிலாந்து: வங்கதேசம் படுதோல்வி
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேசத்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேசத்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
மகளிர் உலகக் கோப்பை லீக் சுற்றின் மிக முக்கியமான கட்டத்தில் இங்கிலாந்து, வங்கதேச அணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மோதின. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெற முடியும் என்ற நிர்பந்தத்தில் களமிறங்கிய இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
சோஃபியா டன்க்லேவின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது.
இதையும் படிக்க | மகளிர் உலகக் கோப்பை: இந்திய அணி 274 ரன்கள் குவிப்பு
அடுத்து களமிறங்கிய வங்கதேசம், இங்கிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 48 ஓவர்களில் 134 ரன்களுக்கு வங்கதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம், 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே மற்றொரு ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால், அரையிறுதிக்கு முன்னேறும். இல்லையெனில் 7 புள்ளிகளுடன் மேற்கிந்தியத் தீவுகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...