சீனாவில் நடைபெறவிருந்த 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள ஹாங்ஷு நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 10 முதல் 25 வரை நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகமாகியுள்ளதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.