அப்பாடா: அரை சதமெடுத்தார் கே.எல் ராகுல்!

வங்கதேசத்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் தொடக்க வீரர் கே.எல். ராகுல் அரை சதமெடுத்துள்ளார்.
அப்பாடா: அரை சதமெடுத்தார் கே.எல் ராகுல்!
Published on
Updated on
1 min read

வங்கதேசத்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் தொடக்க வீரர் கே.எல். ராகுல் அரை சதமெடுத்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அடிலெய்டில் இந்தியா - வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் தீபக் ஹூடாவுக்குப் பதிலாக அக்‌ஷர் படேல் இடம்பெற்றுள்ளார். இதனால் தினேஷ் கார்த்திக் இந்த ஆட்டத்தில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்ததால் ஆரம்பத்தில் இந்திய அணியால் வேகமாக ரன்கள் எடுக்க முடியவில்லை. டஸ்கின் அஹமது சிறப்பாகப் பந்துவீசினார். 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்தது இந்தியா. 16 ரன்கள் எடுத்தபோது புதிய சாதனை நிகழ்த்தினார் விராட் கோலி. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையை கோலி பெற்றார். இதற்கு முன்பு இலங்கையின் ஜெயவர்தனே 1016 ரன்கள் எடுத்த நிலையில் தற்போது அதைத் தாண்டியுள்ளார் கோலி.

சமீபகாலமாக அதிக ரன்கள் எடுக்காத ராகுல் இந்த ஆட்டத்தில் சுறுசுறுப்பாக விளையாடினார். 9-வது ஓவரில் இரு சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடித்தார். அந்த ஓவரில் இந்திய அணி 24 ரன்கள் எடுத்தது. 31 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்த ராகுல் அடுத்தப் பந்தில் ஷகிப் அல் ஹசன் பந்தில் ஆட்டமிழந்தார். ஆரம்பத்திலிருந்து சுறுசுறுப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ், 16 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்து ஷகிப் பந்தில் ஆட்டமிழந்தார். 

இந்திய அணி 13.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 30 ரன்களுடன் விளையாடி வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com