கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறிய நியூசிலாந்து!

டி20 உலகக் கோப்பை இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 3:54 pm IST

டி20 உலகக் கோப்பை இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது.

ஞாயிறுடன் சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நிறைவு பெறுகின்றன. எல்லா அணிகளும் குறைந்தது ஒரு தோல்வியையாவது எதிர்கொண்டதால் அரையிறுதிக்குத் தகுதி பெற பலத்த போட்டி நடக்கிறது. 

இன்றைய ஆட்டத்தில் அயர்லாந்தை நியூசிலாந்து அணி வீழ்த்திய பிறகும் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகவில்லை. இத்தனைக்கும் ஒரு தோல்வி, 3 வெற்றிகளுடன் 7 புள்ளிகளோடு முதல் இடத்தில் இருந்தது நியூசிலாந்து. இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. இதையடுத்து அரையிறுதிக்கு நுழைந்த முதல் அணி என்கிற தகுதியை அடைந்தது நியூசிலாந்து அணி. ஆஸ்திரேலியா 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே நியூசிலாந்தை நெட் ரன்ரேட்டில் பின்னுக்குத் தள்ள முடியும். ஆனால் அதற்குக் குறைவான ஸ்கோரையே ஆஸி. அணி எடுத்ததால் நியூசிலாந்தின் அரையிறுதி வாய்ப்பு உறுதியானது. 

ஐசிசி போட்டிகளில் சிறப்பாக விளையாடும் நியூசிலாந்து அணி இந்தமுறை உலகக் கோப்பையை வெல்லுமா என்கிற ஆவல் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.