டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று: நடுவர்களை அறிவித்தது ஐசிசி

டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் பணியாற்றவுள்ள நடுவர்களை அறிவித்தது ஐசிசி.
டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று: நடுவர்களை அறிவித்தது ஐசிசி

டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் பணியாற்றவுள்ள நடுவர்களை அறிவித்தது ஐசிசி.

டி20 உலகக் கோப்பைப் போட்டி அரையிறுதிச்சுற்று ஆட்டங்களில் இந்தியாவை இங்கிலாந்தும் நியூசிலாந்தை பாகிஸ்தானும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ஞாயிறன்று மெல்போர்னில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டி இறுதிச்சுற்றில் பணியாற்றவுள்ள நடுவர்களை இன்று அறிவித்தது ஐசிசி. மரைஸ் எராஸ்மஸ் மற்றும் குமார் தர்மசேனா ஆகிய இருவரும் கள நடுவர்களாகப் பணியாற்றவுள்ளார்கள். 3-வது நடுவராக கிறிஸ் கஃபானியும் 4-வது நடுவராக பால் ரீஃபிலும் பணியாற்றவுள்ளார்கள். ரஞ்சன் மடுகலே போட்டி நடுவராக இருப்பார். 

இதற்கு முன்பு , இங்கிலாந்து அணி 2010 டி20 உலகக் கோப்பைப் போட்டியையும் பாகிஸ்தான் அணி 2009 டி20 உலகக் கோப்பைப் போட்டியையும் வென்றுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com