டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் பணியாற்றவுள்ள நடுவர்களை அறிவித்தது ஐசிசி.
டி20 உலகக் கோப்பைப் போட்டி அரையிறுதிச்சுற்று ஆட்டங்களில் இந்தியாவை இங்கிலாந்தும் நியூசிலாந்தை பாகிஸ்தானும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ஞாயிறன்று மெல்போர்னில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது.
டி20 உலகக் கோப்பைப் போட்டி இறுதிச்சுற்றில் பணியாற்றவுள்ள நடுவர்களை இன்று அறிவித்தது ஐசிசி. மரைஸ் எராஸ்மஸ் மற்றும் குமார் தர்மசேனா ஆகிய இருவரும் கள நடுவர்களாகப் பணியாற்றவுள்ளார்கள். 3-வது நடுவராக கிறிஸ் கஃபானியும் 4-வது நடுவராக பால் ரீஃபிலும் பணியாற்றவுள்ளார்கள். ரஞ்சன் மடுகலே போட்டி நடுவராக இருப்பார்.
இதற்கு முன்பு , இங்கிலாந்து அணி 2010 டி20 உலகக் கோப்பைப் போட்டியையும் பாகிஸ்தான் அணி 2009 டி20 உலகக் கோப்பைப் போட்டியையும் வென்றுள்ளன.
2019-ல் விழுந்து 2022-ல் சீறி எழுந்த அலெக்ஸ் ஹேல்ஸ்!
நியூசிலாந்து தொடர்: மீண்டும் பயிற்சியாளராகும் விவிஎஸ் லக்ஷ்மண்!
நாக்அவுட் ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்தால் இதுதான் முடிவா?
டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று மழையால் பாதிக்கப்படுமா?
நியூசிலாந்து டி20 தொடர்: மாற்றம் ஏற்படுத்துமா பாண்டியா அணி?
சிலர் ஓய்வு பெறுவார்கள்: கவாஸ்கர் கணிப்பு!
உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியா: தொடரும் சோகம்!
வேதனையும் பெருமையும்: டி20 உலகக் கோப்பை தோல்வி பற்றி விராட் கோலி