உலகின் இரண்டு பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய போதிலும் இந்திய அணி இன்னும் சில இடங்களில் கவனம் செலுத்த வேண்டும் என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டி இந்த மாதத்தில் ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி உலகின் சிறந்த அணிகளான ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக விளையாடி டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது. இருப்பினும், இந்திய அணியில் இன்னும் கவனம் கொடுக்கப்பட வேண்டிய இடங்கள் உள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியின் தோல்விக்குப் பிறகு பேசிய ரோஹித் சர்மா இதனை தெரிவித்தார்.
அதில் அவர் கூறியதாவது: “ முடிவு என்னவாக இருந்தாலும் ஒரு அணியாக நாங்கள் முன்னேற்றமடைந்து வருகிறோம். நாங்கள் அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டாலும் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன். நாங்கள் எங்களது பந்துவீச்சில் கவனம் கொடுக்க வேண்டும். பவர்பிளேவில் என்ன செய்ய வேண்டும் மிடில் ஓவர் மற்றும் டெப்த் ஓவர்களில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெளிவாக இருக்க வேண்டும். நாங்கள் இரு சிறந்த அணிகளுடன் விளையாடியுள்ளோம்.
இருப்பினும், நாங்கள் இன்னும் எப்படி எங்களது ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். இது ஒரு சவாலான காரியம். ஆனால், நாங்கள் அதற்கான விடையைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆஸ்திரேலியாவிற்கு நாங்கள் விரைவாக செல்ல உள்ளோம். உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் உள்ள வீரர்கள் பலருக்கு ஆஸ்திரேலிய மைதானங்கள் புதிது. அவர்கள் ஆடுகளத்தின் தன்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும். உலகக் கோப்பை லீக் ஆட்டங்களுக்கு முன்னதாக நாங்கள் இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளோம்.” என்றார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரு கார் வாங்குகிற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா? - பிரேமலதா விஜயகாந்த்

புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு கையொப்பம்!

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்
சூர்யாவுக்காக பாடிய சிலம்பரசன்!
வீடியோக்கள்

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

