இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

யார் புதிய நெ.1?: யு.எஸ். ஓபன் இறுதிச்சுற்றில் மோதும் வீரர்கள்!

யு.எஸ். ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றுக்கு கார்லஸ் அல்காரஸ், காஸ்பர் ருட் ஆகிய இருவரும் தகுதியடைந்துள்ளார்கள். 

News image

அல்காரஸ்

Updated On :1 பிப்ரவரி 2024, 3:47 pm IST

யு.எஸ். ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றுக்கு கார்லஸ் அல்காரஸ், காஸ்பர் ருட் ஆகிய இருவரும் தகுதியடைந்துள்ளார்கள். 

யு.எஸ். ஓபன் அரையிறுதிச்சுற்றில் ஸ்பெயினைச் சேர்ந்த 19 வயது கார்லஸ் அல்காரஸும் அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோவும் மோதினார்கள். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 6-7 (6/8), 6-3, 6-1, 6-7 (5/7), 6-3 என்ற செட் கணக்கில் அல்காரஸ் வெற்றி பெற்று சாதனை படைத்தார். 2005-ல் நடால் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். அதன்பிறகு கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற இளம் வீரர் என்கிற பெருமையை அல்காரஸ் அடைந்துள்ளார்.

மற்றொரு அரையிறுதிச்சுற்றில் நார்வேயின் காஸ்பர் ருட், ரஷியாவின் கேரன் கச்சனோவை 7-6 (7/5), 6-2, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2-வது தடவையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

யு.எஸ். ஓபன் இறுதிச்சுற்றில் மோதும் வீரர்களில் யார் வெற்றி பெற்றாலும் தரவரிசையில் உலகின் நெ.1 வீரர் என்கிற பெருமையை அடைவார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.