நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

யார் புதிய நெ.1?: யு.எஸ். ஓபன் இறுதிச்சுற்றில் மோதும் வீரர்கள்!

யு.எஸ். ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றுக்கு கார்லஸ் அல்காரஸ், காஸ்பர் ருட் ஆகிய இருவரும் தகுதியடைந்துள்ளார்கள். 

News image

அல்காரஸ்

Updated On :10 செப்டம்பர் 2022, 1:20 pm IST

யு.எஸ். ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றுக்கு கார்லஸ் அல்காரஸ், காஸ்பர் ருட் ஆகிய இருவரும் தகுதியடைந்துள்ளார்கள். 

யு.எஸ். ஓபன் அரையிறுதிச்சுற்றில் ஸ்பெயினைச் சேர்ந்த 19 வயது கார்லஸ் அல்காரஸும் அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோவும் மோதினார்கள். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 6-7 (6/8), 6-3, 6-1, 6-7 (5/7), 6-3 என்ற செட் கணக்கில் அல்காரஸ் வெற்றி பெற்று சாதனை படைத்தார். 2005-ல் நடால் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். அதன்பிறகு கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற இளம் வீரர் என்கிற பெருமையை அல்காரஸ் அடைந்துள்ளார்.

மற்றொரு அரையிறுதிச்சுற்றில் நார்வேயின் காஸ்பர் ருட், ரஷியாவின் கேரன் கச்சனோவை 7-6 (7/5), 6-2, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2-வது தடவையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

யு.எஸ். ஓபன் இறுதிச்சுற்றில் மோதும் வீரர்களில் யார் வெற்றி பெற்றாலும் தரவரிசையில் உலகின் நெ.1 வீரர் என்கிற பெருமையை அடைவார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.