இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் இன்று முதல் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானாா். அவருக்கு வயது 96. எலிசபெத் மறைவு காரணமாக லண்டனில் நடைபெற்று வரும் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்டின் 2-வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.
இந்த டெஸ்டில் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. டெஸ்ட் தொடர் 1-1 எனத் தற்போது சமனில் உள்ளது.
இந்நிலையில் 3-வது டெஸ்ட் இன்று முதல் தொடர்ந்து நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதேசமயம் கூடுதலாக ஒரு நாளைக் கொண்டு டெஸ்ட் ஆட்டத்தை நீட்டித்துக்கொள்வதற்கு தென்னாப்பிரிக்க வீரர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் சனிக்கிழமையான இன்று 3-வது டெஸ்டின் 3-வது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. ஆட்டம் தொடங்கும் முன்பு எலிசபெத்தின் மறைவுக்காக ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் டெஸ்டின் கடைசி மூன்று நாள்களிலும் 98 ஓவர்கள் வீசப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரின் செயலா் உமாநாத்துக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை :தோ்தல் ஆணையம் தகவல்

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு!

பேரவைத் தோ்தல்களுக்கு மத்தியில் மசோதாக்களை கொண்டு வருவது ஏன்? காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கேள்வி
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


