நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இங்கிலாந்து - தெ.ஆ. டெஸ்ட் தொடர்ந்து நடைபெறும்: அறிவிப்பு

3-வது டெஸ்ட் இன்று முதல் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 செப்டம்பர் 2022, 12:23 pm IST

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் இன்று முதல் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானாா். அவருக்கு வயது 96. எலிசபெத் மறைவு காரணமாக லண்டனில் நடைபெற்று வரும் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்டின் 2-வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

இந்த டெஸ்டில் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. டெஸ்ட் தொடர் 1-1 எனத் தற்போது சமனில் உள்ளது. 

இந்நிலையில் 3-வது டெஸ்ட் இன்று முதல் தொடர்ந்து நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதேசமயம் கூடுதலாக ஒரு நாளைக் கொண்டு டெஸ்ட் ஆட்டத்தை நீட்டித்துக்கொள்வதற்கு தென்னாப்பிரிக்க வீரர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் சனிக்கிழமையான இன்று 3-வது டெஸ்டின் 3-வது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. ஆட்டம் தொடங்கும் முன்பு எலிசபெத்தின் மறைவுக்காக ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் டெஸ்டின் கடைசி மூன்று நாள்களிலும் 98 ஓவர்கள் வீசப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.