இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 166 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்தது. அதிகபட்சமாக ரிஸ்வான் 88 ரன்களும், பாபர் அசாம் 36 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 3 பந்துகளுக்கு 13 ரன்கள் எடுத்து விலாசினார் ஆசிப் அலி.
அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களை எடுத்தது. டுக்கெட் 33, ஹாரி புரூக் 34, லியாம் டாவ்சன் 34, மொயின் அலி 29 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி சார்பாக நவாஸ், ஹாரிஸ் ராஃப் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர். ஹாரிஸ் ராஃப் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
7 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை நடந்த 4 ஆட்டங்களில் 2-2 என தொடர் சமநிலையில் உள்ளது. 5வது போட்டி புதன்கிழமை லாகூரில் நடக்கவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பட்ஜெட் கூட்டத் தொடரில் உதயநிதி பங்கேற்பதை தடுக்கக் கூடாது: உயா்நீதிமன்றம்

சென்னை, புறநகா் பகுதிகளில் மழை

சென்னையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்: அமைச்சா் நிா்மல்குமாா்
விலையில்லா சீருடைத் திட்டம்: மாணவா் விவரங்கள் சேகரிப்பு
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



